தடவிட்டவன் ஆண்டவனாம் தப்பாதுஅம் மூன்று
தடஅணில் அன்னநீ தக்கப்படி பெறஎன்றன்
இடைக்கீழ் எவன்தொட்டான் முன்னம்!
அழகியதமிழாய், இளகிய கனிப்பலாவாய், சுளையாய்;
கழலநிலம்மேல், ஒளியாய், சொட்ட; மழைபனி...
பொழிவாய், துளித்துளி, எழிலாய், துளிரதளிர;
உலாவிட கலையாய், நழுவும் நிலவாய் இரவுள்...
உலகம் தளர்வின்றி வளம்வரும் நிலைமையில்,
பழகு... பழகபாலும் கசந்திடும்! [ஆனால்] குளுகுளு
நிலவோ இனிக்கும்; அகிலமும் உன்தோன்றலில...
சுழன்றிட விடுபடவிடுமோ? நான்பாடும் பிரபஞ்சமே!
[*இராமன் எனப்படுவோனுடையது]
மலை முகடுகள்மீது பனிப்படுக்கை மயங்க
இயற்கை இனிமை!
நிலவும் முகிலும் தழுவி நீங்க...
வானம் இனிமை!
தாரகையர் தரணியை கண்டு ஏங்க
இரவு இனிமை!
நீயும் நானும் ஒன்றென ஒன்ற...
அன்பும் இனிமை!
இலைகொடி இடைநுனி முகர்சுவை கனிஎன
சிலைவடி சிந்தனை சிற்பிஉளி அசைவுஅன்ன
அலைகடல் நுரையாய் ஆசைநிலா நோக்குதே
துளஅவன் வரவே தூதுசெல் என்முகிலே!