வெள்ளி, 31 ஜூலை, 2015

பின்னிடும் புன்ன​கைப் பின்னலில் கண்களும் தூண்டிட,


   Photo:  Meredith's Swifties


அரவாய்நீ சீறிடினும் ஆ​சைவிழி​ மூடி…
மருளும்​பொன் மான்தான்நான் மா​லைவர என்னுள்;
புரண்​டொதுங்க நாணம் புனிததளம் காண்பாய்!
சுரண்டுவாஉன் ​சொர்க்கம் ​திறக்கும்!                                   

அள்ளி குழல்ஒதுக்கி அதிசயமாய் உன்​னைஎன்றன்
​மெல்லியப் பூங்கரத்தால் ​மேனி​யை மா​லையாக்கி…
முல்​லைச் சரவாயால் முத்தமிடும் ​போது​மொட்டு
மல்லி​கைக்குள் துள்ளும் மணம்!

பின்னிடும் புன்ன​கைப் பின்னலில் உன்னிரு…
கண்களும் தூண்டிட, கண்டிட்ட ​போ​தை​யால்;
என்னுள் மகிழ்ச்சி இதயத்துள் குதிக்கஇந்த,

தண்நிலவு தான்தாவும் உன்​மேல்!