

பால்கொண்டு கழுவுவோன் கோயில் கலசங்களோ?
பளீரென துகில்விலகி...
தேனா அபிசேகத்திற்காய் நிற்கும் தெய்வீகம் என்பாரே...
ஆலய நடனப்பெண் சிலையோ?
வானம் பார்க்கும் பருவக் கொடிமலர பனித்தெரிக்க,
திமிரும்
கனிகளோ?
தாலியணி பெண்அடிமைகள் கற்போ?
காதல் தூய மலராய் நானும்...
நாண... உரையேன்! இனிமை ஏக்கம்பசி இல்லாமல்...
நகரட்டும் நமக்குள்;
ஆணாக உணர்வால், என்னை நழுவிடாமல்;
அணைத்து என்னுள் ஒன்றி...
தழுவவிடாமல் தடுப்பதும்
மதபேதவம்சமோ?
கர்மம் பறையும் கடவுளோ?
அம்மியிலிட்ட மிளகாய் அன்ன அரைத்துத்
துவம்சம் செய்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக